Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உள்ளாட்சித் துறை நிர்வாகத்தை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி சார்பில் ஆர்ப்பாட்டம்

ஜுலை 20, 2023 10:04

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்களின் ஊதியத்தை குறைப்பதையும், நிரந்தர பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதையும், ஒப்பந்த தொழிலாளர் முறையை கைவிட கோரியும், உள்ளாட்சித் துறை நிர்வாகத்தை கண்டித்து அண்ணா சிலை முன்பு
தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சாலை முன்பு நாமக்கல் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இதில் மாவட்டத் தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் அன்புமணி, ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட பொதுச் செயலாளர் தனசேகரன், ராமகிருஷ்ணன் ஏஐடியுசி மாவட்ட வெளியீட்டு செயலாளர், ஜெயராமன், ஏஐடியுசி மாவட்ட பரப்புரை செயலாளர் சுப்பிரமணி, ஏ.ஐ.டி.யு.சி ஆட்டோ சங்கத் தலைவர், சுகுமார், சிபிஐ நகர செயலாளர் முனுசாமி, சிபிஐ ஒன்றிய செயலாளர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

இறுதியாக கோபிராஜ்  நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் 70 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்